ஒர்க்ஷாப்புக்குள் புகுந்த புள்ளிமான் குட்டி
காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள டிராக்டர் ஒர்க்ஷாப்புக்குள் அதிகாலை நேரத்தில் புள்ளிமான் குட்டி ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கழனிவாசல் பகுதியில் கிட்டு என்பவர் டிராக்டர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இன்று அதிகாலை ஒர்க்ஷாப்புக்குள் புள்ளிமான் குட்டி ஒன்று புகுந்துள்ளது. இதனை அங்கு பணியாற்றிய பணியாளர் ஒருவர் கண்டு, வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஒர்க்ஷாப்புக்குள் இருந்த புள்ளிமான் குட்டியை பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிய புள்ளிமான் குட்டி அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் ஓடிச் சென்றது.