
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
எழுத்தாளர் Sivagangai Admin · 28 ஆகஸ்ட், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஆக.28-
காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி சுயம்பிரகாசேசுவரர் கோவில் (தான்தோன்றீஸ்வரர்) கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் காரைக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ளன.
இதில் காரைக்குடி முடியரசன் சாலையில் உள்ள 12 ஏக்கர் 15 சென்ட் கோயில் நிலத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் நகரை சேர்ந்த எஸ்.பி.டி., கருப்பையா என்பவரது மனைவி தனலட்சுமி என்பவர் பட்டா பெற்றிருந்தார் பத்திரப் பதிவு அவர் பெயருக்கு செய்யப்பட்டிருந்தது. திடீரென்று தனலட்சுமி அந்த இடங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டதால் பட்டா விபரம் கோயில் நிர்வாகிகளுக்கு தெரியவந்தது
இதையடுத்து இழுப்பக்குடி கிராம மக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் காவல்துறையில் பட்டா போலியாக வழங்கப்பட்டுள்ளது என புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தையும் நாடினர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள், காரைக்குடியில் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மனுவை பெற்ற அமைச்சர், பட்டாவை ரத்து செய்து கோயில் நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 12 ஏக்கர் 15 சென்ட் கோயில் நிலம் மீண்டும் கோயில் தேவஸ்தானத்திற்கு கிடைத்ததாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(16)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026