காரைக்குடி மாநகராட்சியில் பேனா, பென்சில், பேப்பர் வாங்க ரூ 50 லட்சம்
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் (பொ) குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பாலு முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கவுன்சிலர் பிரகாஷ் (அதிமுக) பேசுகையில், மாநிலத்தின் கடன் சுமையை குறைப்பதாக முதல்வர் விஜய் கூறியுள்ளார். ஆனால், 2026-27-ம் நிதியாண்டுக்கு காரைக்குடி மாநகராட்சிக்கு பேனா, பென்சில், பேப்பர் வாங்க ரூ.50 லட்சமா? என கேள்வி எழுப்பினார். இது குறித்த விபரங்கள் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது அதிகபட்ச தொகையாக உள்ளது. மேலும், 2025-26-ம் நிதியாண்டில் செலவழிக்கப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதுபோன்று உள்ளாட்சி அமைப்புகளில் நிதியை தவறாக செலவழித்தால் கடன் சுமை தான் அதிகரிக்கும். இதை தடுக்க வேண்டும் என்று கூறினார்