காரைக்குடி புனித சகாய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
காரைக்குடி புனித சகாய அன்னை ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆலயத் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அரியக்குடி வளர் நகர் பங்கு பணியாளர் அருள் ஆனந்த், தேவகோட்டை ஆனந்தா கல்லூரி அருள்பணியாளர் ஜி.அலெக்சாண்டர் நற்குணம் திருப்பலியை நிறைவேற்றினர். தொடர்ந்து சகாய அன்னை உருவம் தாங்கிய கொடியினை பங்கு தந்தையர்கள் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து, ஆலயத்தை வலம் வந்து கொடியினை மந்திரித்து கொடி கம்பத்தில் கட்டினர். ஆலய பங்குத்தந்தை அருள் முனைவர் சார்லஸ், உதவி பங்கு பணியாளர் அருள் பணி இனிக்கோ ஆனந்த் மற்றும் செக்காலை பங்கு இறை மக்கள் க கலந்து கொண்டு இக்கோடியேற்ற நிகழ்வினை சிறப்பித்தனர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வருகிற ஆக.15-ம் தேதி மாலை நடக்கிறது. தேர் பவனியை மதுரை உயர்மறை மாவட்ட மேதகு பேராயர் அந்தோணிசாமி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.