காரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு இன்று துவக்கி வைத்தார் காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி சம்பை ஊற்று தலைமை நீரேற்று நிலையத்தில் ஏற்கனவே 12 ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு காரைக்குடி பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரைக்குடியில் வீடுகளுக்கு 24 மணி நேரம் குடிநீர் சப்ளை செய்யும் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வீடுகளில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலம், காரைக்குடியுடன் இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகவும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. அதன் அடிப்படையில் காரைக்குடியில் சம்பை ஊற்று உள்பட ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியினை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு இன்று தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் (பொ) குணசேகரன் மற்றும் ஆணையாளர், பொறியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.