
காரைக்குடியில் மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு
16 காளைகள், 144 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு
எழுத்தாளர் Sivagangai Admin · 22 மே, 2026
1 நிமிட வாசிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோவில் தேர்த்திரு விழாவை முன்னிட்டு மண்ணின் மைந்தர்கள் நடத்தும் 8ம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
இதில்
சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் 144 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர் ஒவ்வொரு காளைகளுக்கும் தலா 20 நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு 9 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் களமிறங்கினர்.
வீரர்கள் மற்றும் மாடுகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு களம் இறக்கப்பட்டனர். மாடுகளும் ஆக்ரோஷமாக களத்தில் விளையாட அதனை அடக்குவதற்காக வீரர்களும் உற்சாகத்துடன் மாடுகளை மடக்கி பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுக்கோப்பை மற்றும் ரூ.8000 ரொக்க தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஆர்வமுடன் கண்டு களித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை காரைக்குடி மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வில் காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் பாராட்டினார்

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச நீர் மோர் பந்தல்
கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு திறந்து வைத்தார்

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
அதிகாலை திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்.