தரமற்ற காலை உணவு , ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்
அமைச்சர் பிரபு தொலைபேசி மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்ற தூய்மை பணியாளர்கள்
எழுத்தாளர் Sivagangai Admin · 22 மே, 2026
2 நிமிட வாசிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் 85 பேர் நிரந்தர தூய்மை பணியாளர்களாகவும், 185 பேர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். நிரந்தரமான பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போன்று ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் ஊதியத்தை உயர்த்தி தரவில்லை என்றும் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு பல ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட
பிஎஃப் (PF) பணம் வரவு வைக்கப்படவில்லை என்றும் தினந்தோறும் காலையில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக உள்ளதாகவும் கெட்டுப்போன உணவை வழங்குவதாகவும், தூய்மை பணிக்கு வழங்கப்படும் வாகனங்கள் பழுதடைந்து உள்ளதாகவும் அதை பழுது நீக்கி நல்ல வாகனம் தர வேண்டும் என்றும் இறந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என பல்
வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் வாகனத்தை சிறைபிடித்து காரைக்குடி - தேவகோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள கொப்புடைய நாயகி அம்மன் கோவில் அருகே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுடன் ஏ ஐ டி யு சி தொழிற்சங்கமும் போராட்டத்தில் பங்கேற்றனர். காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் போராட்டம் குறித்து அறிந்த அமைச்சர் டி கே பிரபு உடனடியாக தொழிற்சங்க நிர்வாகியிடம் தொலைபேசியில் தொடர்பு தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தூய பணியாளர்கள் கலந்து சென்றனர். கீழ் பணியாளர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வில் காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் பாராட்டினார்

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச நீர் மோர் பந்தல்
கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு திறந்து வைத்தார்

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
அதிகாலை திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்.