போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி; கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்
காரைக்குடியில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழக காவல்துறை, ஊர் காவல் படை, விவேகானந்தா நர்சிங் கல்லூரி, எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி வெல்பர் அசோசியேஷன் இணைந்து போதை ஒழிப்பு தீப்பந்த பேரணியை நடத்தின. பேரணியை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.