
விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தம்
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவு
எழுத்தாளர் Sivagangai Admin · 27 மே, 2026
1 நிமிட வாசிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்தலை தவிர்க்க புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரால் மொத்தம் 76 குவாரிகள் டிரோன் மூலமாக அளவீடு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.
இந்நிலையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு இன்று காலை விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத
்துறையினரிடம் கலந்தாய்வு மேற்கொண்டார். டிரோன் மூலம் அளவீடு செய்யப்பட்ட குவாரிகளில் குத்தகை பரப்பிற்கு வெளியே குவாரிப் பணி மேற்கொண்ட 23 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் ட்ரோன் மூலம் அளவீடு அறிக்கையின்படி உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0